குடியரசு தின விழா நிகழ்ச்சி.

தொண்டி – ஜனவரி 29,2023

தொண்டி இறைமறை இயக்கம் அறக்கட்டளை சார்பில் இந்திய திருநாட்டின் 74 வது குடியரசு தின விழா கொடியேற்றும் நிகழ்ச்சி தொண்டி பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.

தர்பியத்துல் அத்ஃபால் தீனியாத் குர்ஆன் மதரஸாவின் மாணவர் J. ஹைஸம் ஜக்கரிய்யா கிராஅத் ஓதினார்.

தர்பியத்துல் அத்ஃபால் ஒருங்கிணைப்பாளர் மௌலானா, ஹாஃபிழ் N. முஹம்மது உமர் ஹஸனீ M.A. அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

காலை 7.00 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரிய பள்ளிவாசல் பைத்துல் மால் சபை தலைவர் அல்ஹாஜ் S. சுலைமான் அவர்கள் இந்திய திருநாட்டின் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

நிகழ்ச்சியில் இறைமறை இயக்கம் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பெரிய பள்ளிவாசல் பைத்துல் மால் சபை உறுப்பினர்கள், பொது மக்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மௌலானா S. செய்யது முஹம்மது காசிம் யூசுஃபீ மற்றும் ஹாஃபிழ் S. முஹம்மது ஃபஹீம் அவர்கள் செய்திருந்தனர்.

சுதந்திர தின அணிவகுப்பு

நமது தொண்டி ஐக்கிய ஜமாஅத் மற்றும் நகர ஜமாஅத்துல் உலமா சபை இணைந்து நடத்திய சுதந்திர தின பொதுக் கூட்டத்தை முன்னிட்டு நமது தர்பியத்துல் அத்ஃபால் தீனியாத் குர்ஆன் மத்ரஸா மாணவி மாணவியர் பங்கேற்ற தேசியக் கொடி அணிவகுப்பு.

வீடியோவைக் காண கீழே க்ளிக் செய்யவும்.



மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

ஆஷூரா தரும் படிப்பினைகள்

— நூ . அஸ்மி ஃபவ்ஸானா —

தர்பியத்துல் அத்ஃபால் தீனியாத் குர்ஆன் மத்ரஸா மாணவி.


முன்னுரை.

ஹிஜ்ரி வருட கணக்கின் முதல் மாதமான மொஹரம் மாதம் அல்லாஹ்வினால் புனிதமாக்கப்பட்ட நான்கு மாதங்களில் ஒன்றாகும் இந்த மாதத்தின் பிறை 10 அன்று நோற்கப்படும் நோன்புக்கு அசுரா நோன்பு எனப்படும் இந்த ஆசுரா நோன்பை பற்றி குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் கூறப்பட்டுள்ள செய்திகளை இக்கட்டுரையில் காண்போம்.

ஆஷுரா நோன்பு

ரமலான் மாதத்தின் கடுமையான நோன்பு அல்லாத பல்வேறு சுன்னத்தான நோன்புகள் இஸ்லாமிய மார்க்கத்தில் கூறப்பட்டுள்ளன அவற்றில் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட நோன்பு ஆசுரா நாளில் நோற்கப்படும் நோன்பாகும்.

ஆசுரா எனும் இந்த நாளையும் ரமலான் எனும் இந்த மாதத்தையும் தவிர வேறு எதையும் ஏனையவற்றை விட சிறப்பித்து தேர்ந்தெடுத்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை என்று இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஆஷூரா நோன்பின் சிறப்பு

ஆஷூரா நாளில் நொறுக்கப்படும் நோன்புக்கு ஓராண்டு கால பாவங்களுக்கு பரிகாரமாக அமைகிறது பத்தாவது நாளில் ஆஷூரா நோன்பு நோற்பது அதற்கு முந்தைய ஓராண்டுக்கு பாவ பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் ஆதரவு வைக்கிறேன் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

இணைய தளம் அறிமுகம்.

அதிவேக பாய்ச்சலில் நகரும் இன்றைய நவீன யுகத்தில் நமது மார்க்கத்தையும் அதே வேகத்துடன் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவில்லையாயின் அசத்திய கொள்கைகள் மக்களை ஆட்கொண்டு தவறுகள் பல உருவாக காரணமாகிவிடும்.

இந்த அடிப்படையில் தான் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொண்டி நகரில் மார்க்கக் கல்வி போதித்து வரும் நமது தர்பியத்துல் அத்ஃபால் மத்ரஸாவின் செயல்பாடுகளை இணைய ரீதியாக முன்னெடுத்துச் செல்ல ஒரு புதிய இணையதளம் துவங்கப்பட்டுள்ளது.

நமது தர்பியத்துல் அத்ஃபால் தீனியாத் குர்ஆன் மதரஸாவின் அனைத்து வரலாற்று நிகழ்வுகள், தகவல்கள் தொகுக்கப்பட்டு வெளியிடப்படவுள்ளது.

அத்தோடு அன்றாட மத்ரஸாவின் நிகழ்வுகளும் நமது மாணவ மாணவியர் பங்கு கொள்ளும் நிகழ்வுகளின் வீடியோக்களும் வெளியிடப்படவுள்ளன என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.